ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டு விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோன் படலம் என்பது ஆக்சிஜனின் மற்றொரு (O3) வடிவம் ஆகும். இந்த ஓசோன் படலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமியில் நேரடியாக படாதவாறு தடுத்து பூமியைப் பாதுகாக்கிறது.
இந்நிலையில் விஞ்ஞானிகள் கடந்த மாதம் வட துருவத்தில் ஆர்டிக் பகுதிக்கு மேலே ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
வட துருவத்தில் மிகக் குறைந்த அளவு வெப்பநிலை நிலவும் அதன் காரணமாக இவ்வளவு பெரிய துளை ஏற்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். மேலும் இது தென்துருவம் வரை பரவும் என்றும் எச்சரித்தார்கள்.
ஓசோன் படலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு இந்த துளை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த இந்த பெரிய துளை தானாகவே அடைபட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை, வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது இதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) வெளியேற்றப்படுவது குறைந்து அதனால் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளை அடைபட்டதா என்றால் அதுதான் இல்லை.
போலார் வெர்டெக்ஸ் நிகழ்வு காரணமாக ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சரி ஆகியுள்ளது. Polar Vortex எனப்படும் High-altitude Current துருவப் பகுதிக்கு குளிர்காற்றை கொண்டுவந்த காரணத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை அடைபட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஐரோப்பிய செயற்கைக்கோள் ஆன Copernicus ECMWF உறுதிப்படுத்தியது.