உலகம்

தெற்கு பிரேசிலில் நடந்த கொடூரம்…..கருப்பினத்தவர் அடித்து கொலை……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரேசில் :

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே என்ற நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் , கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன.அங்கு ஏற்கனவே  கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்... 

சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தபின் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மரம் மற்றும் செடியை சேதப்படுத்தாமல் கொழுந்துவிட்டு எரியும் அதிசய நெருப்பு ஆச்சரியத்தில் மக்கள்…

naveen santhakumar

காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம் !

News Editor

தொலைக்காட்சி நிருபரின் மைக்கை கடித்த பாம்பு

Admin