இந்தியா

தலை, கைகள் துண்டிக்கப்பட்டு ‘சைக்கோ’ பாணியில் இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மீரட்:-

ஓராண்டுக்கு முன்பாக இளம்பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட் (Meerut) அருகே டவ்ராலா (Daurala) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் லோஹியா (Lohia) கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு போலீஸாருக்குக் கடும் சவாலாக இருந்தது. இவ்வழக்கில் துப்பு ஏதும் கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் கொலையாளி சிக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஏக்தா ஜஸ்வால். இவர் ஒரு பி.காம். மாணவி. இவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய டாக்ஸி வர்த்தகத் தொழில் இருக்கிறது. இவரது வயது 19. அந்தப் பெண் முகமது ஷாகிப் என்ற அந்த 20 வயது இளைஞரின் காதல் வலையில் விழுந்தார்.

இந்நிலையில் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் ஏக்தா ஜஸ்வால், முகமது ஷாகிபுடன் வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டார். அவருடனேயே இருப்பதற்காக தன் செல்வந்த குடும்பத்தையும் அன்பான பெற்றோரையும் உற்றார் உறவினரையும் துறந்து காதலனுடன் கைகோர்த்தார். இந்நிலையில்தான் ஏக்தா ஜஸ்வாலின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்ட நிலையில் மீரட்டில் வயல்வெளியில் கிடந்தது.

கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி லோஹியா கிராமத்தில் ஈஸ்வர் பண்டிட் என்பவரது வளர்ப்பு நாய் ஷபீர் அகமது என்பவரது கரும்பு தோட்டத்தில் இருந்து மனித கை ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். அப்போது கரும்பு தோட்டத்தில் தலை மற்றும் கைகள் வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ALSO READ  காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்த டிக் டாக்...

இந்தக் கொலை தொடர்பாக துப்புத்துலக்கப்பட்டு நேற்று முகமது ஷாகிப் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர். கொல்லப்பட்ட ஏக்தா ஜஸ்வாலின் தங்க நகைகள், ரொக்கம், மொபைல் போன் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.

கொலையாளியைக் கைது செய்து வந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் பெண்ணை இழந்த குடும்பத்தினர் முகமது ஷாகிப்பை தாக்கினர். தலையைத் துண்டித்தால் அடையாளம் தெரியாது, ஆனால் கைகள் ஏன் துண்டிக்கப்பட்டன என்ற கேள்விக்கு, கையில் ஷாகிப் பெயரை அந்தப் பெண் பச்சைக் குத்தியிருந்ததால் கண்டுப்பிடித்து விடுவார்கள் என்று கைகளையும் துண்டித்துள்ளான்.

ஷாகிப்பை போலீசார் ஏக்தா ஜஸ்வாலின் தலை மற்றும் கைகளை எங்கே மறைத்தான் என்பதைக் காட்ட அழைத்துச் சென்ற போது போலீஸ் ஒருவரின் ரிவால்வரை உருவி தப்ப முயன்றான், ஆனால் அவன் கால்களில் போலீஸ் சுட்டதில் மூன்று தோட்டக்கள் பாய அவனால் தப்ப முடியவில்லை. தற்போது மருத்துவமனையில் இருக்கிறான் ஷாகிப்.

ALSO READ  சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு..!

ஏக்தா ஜஸ்வாலைக் கொன்ற முகமது ஏக்தா உயிருடன் இருப்பது போலவே அவரது வாட்ஸ் அப் கணக்கில் எதையாவது பகிர்வது என அவர் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் காட்டியுள்ளான்.

இவன் தன்னைக் காதலிக்கவில்லை தன் பணத்துக்கும் நகைக்கும் தான் நடிக்கிறான் என்று ஏக்தா ஜஸ்வால் அறிந்தை தெரிந்துகொண்ட ஷாகிப் கொலை செய்துள்ளான் என்று மீரட் போலீஸ் அதிகாரி அஜய் சஹானி தெரிவித்தார்.

இதுதான் ஏக்தா ஜஸ்வால் என்பதைக் கண்டுப்பிடிக்கவே போலீஸாருக்கு பல மாதங்களாயின. போன்கால் வரலாறு, காணாமல் போனதாக புகார் அளித்தவர்கள் பட்டியல் என்று போலீஸார் முழு வீச்சுடன் இயங்கி கடைசியில் கிடைத்த புள்ளியைக் கோலமாக்கினர்.

லூதியானாவில் ஜஸ்வாலை அடிக்கடி சந்தித்த ஷாகிப் தன்னை இந்துமதத்தைச் சேர்ந்தவர் போல் காட்டிக் கொண்டுள்ளான். மேலும் தனது பெயரை அமன் என்று கூறியுள்ளான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாகிப் தன்னை காதலிப்பதுபோல் நடிப்பதை ஜெய்ஸ்வால் கண்டுபிடித்துள்ளார் இதையடுத்து இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஜஸ்வாலிடமிருந்து ரொக்கத்தையும் நகைகளையும் சுருட்ட நினைத்த ஷாகிப் குடும்பத்தினர், ஜஸ்வாலுக்கு கூல்ட்ரிங்க்ஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் ஷபீக் அகமது என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் வைத்து தலை மற்றும் கைகளை வெட்டி துண்டித்துள்ளான் ஷாகிப் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்கள் நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார்

News Editor

அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை ‘சத்ரபதி சாம்பாஜி மஹாராஜ் விமானநிலையம்’ என பெயரை மாற்றி மஹாராஷ்டிரா அரசு உத்தரவு…..

naveen santhakumar

செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar