இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/03/vetrimaran.jpg)
அதனையடுத்து நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கி வருகிறது படக்குழு.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/03/NTLRG_20210328194928057466.jpg)
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார், சூரி நடிக்கும் படம், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் இவ்விரண்டையும் முடித்தபின்னர் விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Vetrimaran #Dhanush #Asuran #Vjay #Soori #Vijaysethupathi #VijayVetrimaran #TamilThisai #Tamilcinema #Tamilmovie #Cinema #CineUpdate #Kollywood #cinemas #Vijay #Thalapathy #Vadachennai