தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான முறையில் கட்டப்படும். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என நினைத்தது பாஜக தான்.காங்கிரஸ் அல்ல என்று கூறினார்.