தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளர்.
இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியது போலவே வாக்களித்து திமுகவை வெற்றி அடையவும் வைத்துள்ளனர். முதல்வர் பதவி ஏற்கப்போகும் தலைவர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும்.
தமிழக மக்கள் பல எதிர்பார்ப்போடு வாக்கு அளித்து உள்ளனர் அதை கண்டிப்பாக திமுக ஆட்சி நிறைவேற்றும். கொங்கு மண்டலக தேர்தல் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் தொடர்ந்து திமுகவுக்கு அதிக வாக்கு பெற்று தந்து திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்புகளை உருவாக்குவோம்.
மிக சிறிய வாக்கு வித்தியாசத்தில் கொங்கு நாடு மக்கள் கட்சி சில பகுதிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் அடுத்த தேர்தலில் வெற்றியடைய முழு முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் கூறினார்.