அரசியல்

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி  எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

ALSO READ  கட்சியில் சேர்ந்த 8 வது நாளே முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் அறிவிப்பு !

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  மாலை 06.00 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.

அதனையடுத்து நாளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

naveen santhakumar

கிரண்பேடியால் தினமும் தொல்லை: முதலமைச்சர் நாராயணசாமி

Admin

ஒரு ஓட்டுக்கு 5 லட்சம் கேளுங்கள், கமல்காசன் பரப்புரை…

News Editor