தமிழகம்

கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில் இந்தியாவிலேயே கொரோனா தொற்று பரவலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. 

இதன் ஒரு பகுதியாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் சென்னை பிரகாசம் சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் தடுப்பூசி போடும் முகாமினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதன் பின்னர் தடுப்பூசி போடுவதற்கு வரிசையில் அமர்ந்திருந்த மக்களிடம் நலம் விசாரித்த பின்னர் அவர்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மற்றும் உறவினர்களையும் தடுப்பூசி போட அழைத்து வருமாறு அறிவுறுத்தினார்.

ALSO READ  தமிழக பட்ஜெட் ஆலோசனை: எதிர்பார்ப்பில் மக்கள் ?

அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாறன் மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

naveen santhakumar

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; மேடை நடன கலைத்துறையினர் சார்பில் மனு ! 

News Editor

பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்க வேண்டும்; இந்திய வாலிபர் சங்கம் கோரிக்கை !

News Editor