தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான சூர்யாவிற்கு, கடந்த 7-ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு, நடிகர் சூர்யா தன்னைத் தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை எடுத்து வந்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/02/sk1_0.jpg)
இந்த நிலையில், நடிகர் சூர்யா முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக நடிகரும், அவரது சகோதரருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,”அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.