சென்னை:-
நேற்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு, பூமி பூஜை நடப்பந்தது. இதை முன்னிட்டு தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தும் விதமாக ராமரின் உருவ படத்தை வெற்றியில் வரைந்து, புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை சுகன்யா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/08/IMG-20200806-WA0009.jpg)
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நேற்று (ஆக.5) அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடந்தது. பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பல தலைவர்களும், ஆன்மிக பெரியவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். பலர் சமூகவலைதளங்களில் ராம பிரான் தொடர்பான படங்களை டி.பி. மற்றும் ஸ்டேட்டஸாக வைத்தனர். மேலும் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு எப்படி இருக்கும் என்ற மாதிரி புகைப்படத்தையும் வைத்திருந்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடிகை சுகன்யாவோ தனது நெற்றியில் வில்லேந்திய ராமரின் உருவத்தை பொட்டாக வைத்துள்ளனர். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இவரின் இந்த போட்டோ சமூகவலைதளத்தில் வைரலானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்து, 80 மற்றும் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சுகன்யா. நடிப்பை தாண்டி, பரதநாட்டிய கலைஞர், மியூசிக் கம்போஸர், வாய்ஸ் ஓவர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.