கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் நரதன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் முஃப்தி. இந்த படம் வெளியாகிய மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பாடத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதனையடுத்து தமிழிலும் இயக்குநர் நரதன் இயக்கி வந்தார். நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் நரதன் படப்பிடிப்பு தாமதம் போன்ற பிரச்சனைகளால் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதனை தொடர்ந்து இந்த இப்படத்தினை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் படக்குழுவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே தற்போது முஃப்தி திரைப்படத்தினை இயக்குநர் நரதன் விலகியுள்ளதால் சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ளதாகவும், இன்று படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று படத்தின் பெயரை வெங்கட்பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், ஆனந்த் ஷங்கர், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா,ரஞ்சித், சாம் ஆண்டன், சந்தோஷ் ஜெயகுமார், அஷ்வத் மாரிமுத்து ஆகிய 10 இயக்குனர்கள் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து இந்த பத்து இயக்குனர்களும் சிம்பு மற்றும் கெளதம் கார்த்தி இணைத்து நடிக்கும் படத்தின் பெயரை வெளியிட்டனர். அதில் பத்து தல என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.