தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பெங்களூரு:-
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓவிய கலைஞர் டைப்ரைட்டரில் அழகாக ராமர் உருவத்தை வரைந்துள்ளார்.
நேற்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் ராமரை போற்றும் வகையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் டைப்ரைட்டரில் ராமரின் உருவத்தை அழகாக வரைந்துள்ளார்.
இந்த ஓவியத்தை வரைந்த ஏ.சி.குருமூர்த்தி இதுகுறித்துக் கூறுகையில்:-
ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்தியில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமருக்கு ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்க வேண்டும் என்று இந்த ஓவியத்தை வரைந்தைன். மேலும் இந்த ஓவியத்தின் மூலமாக இந்த உலகம் நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதத்தை புரிந்து கொள்ளும் என்றார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.