தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்தவகையில் கோவிலுக்கு பக்தர்கள் வராததால் அர்ச்சகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர்களுக்கு உதவித்தொகையாக 4000 ரூபாய் வழங்கப்டும் என அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மேலும், 15 வகை மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் இந்த திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.