இந்தியா வணிகம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகைக் கார்களை உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தற்போது நான்கில் ஒரு பங்கு உற்பத்தி கூட நடைபெறாத நிலையில், நிறுவனத்துக்கு 2 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் மறைமலைநகர், குஜராத்தில் உள்ள சனண்ட் ஆகிய இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆலைகளை மூடுவதனால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே ஆலைகளை மூடிய நிலையில், இந்தியாவிலும் மூட முடிவு எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரை வாங்கியவர்களுக்கான சேவையையும் தொடர்ந்து அளிக்க உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை… 

naveen santhakumar

ஆதரவற்ற குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாகிய விராட் கோலி…

Admin

வரும் 21ம் தேதி முடிய இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 வரையில் முன்பதிவு ரத்து: ரயில்வே அறிவிப்பு

News Editor