டெல்லி:-
ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய ராணுவம் வலியுறுத்தி உள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200709-WA0007.jpg)
பாதுகாப்பு மற்றும் முக்கியமான தரவுகள் கசிவதை தடுக்கும் நோக்கில் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும், இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தடை விதிக்கப்பட்ட 89 செயலிகள்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/FB_IMG_1594266945247.jpg)
பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 69 A-ன் கீழ் தேசிய பாதுகாப்பு நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய (Prejudicial) வழி என்று 59 சீன செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபல செய்தி செயலியான Daily Hunt, வீடியோ கான்பரன்சிங் செயலியான Zoom, மொபைல் எண்களை கண்டறியும் TrueCaller உள்ளிட்ட செயலிகளும் இந்த தடை பட்டியலில் உள்ளது.
இவற்றில் பல செயலிகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த என்பது குறிப்பிடத்தக்கது.