புது டெல்லி
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் தங்க மகன் சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள எக்ஸ்யூவி700 காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது
டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.
இதை குறிப்பிடும் வகையில், டெயில்கேட் மற்றும் ஃபெண்டரில் ‘68.55’ என்ற பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஈட்டி எறிதல் முத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமித் அன்டிலின் சாதனை, ஹெட்ரெஸ்டுகள் மற்றும் முன் பக்க டேஷ்போர்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 புத்தம் புதிய காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதை பலரும் வியந்து பார்க்கின்றனர்.