லக்னோ:-
உத்திரபிரதேச மாநிலத்தில் முகமூடி அணியாத ஆடுகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெக்கோங்கஞ்ச் பகுதியில் மாஸ்க் சாலையில் சுற்றிதிரிந்த ஆடுகளை காவல்துறையினர் கைது செய்து ஜீப்பில் ஏற்றி சென்று சிறையில் அடைத்தனர்.
இது குறித்த தகவலறிந்து காவல்நிலையம் வந்த ஆட்டின் உரிமையாளர், தன்னுடைய ஆட்டை விடுவிக்கும் படி காவலர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது சட்டங்களை கரைத்து குடித்த காவலர்கள் உங்களுடைய ஆடு, பொது முடக்கத்தை மீறி, சாலைகளில் சுற்றிதிரிந்ததாகவும், மேலும் முகமூடியும் அணியாததால் தான் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறியுள்ளார். காவலர்களின் அதிபுத்திசாலிதனைத்து கண்டு வாயடைத்து போனார் ஆட்டின் உரிமையாளர்.
கடைசியில் ஒருவழியாக ஆட்டின் உரிமையாளரை ஆடு இதுபோன்று பொதுவெளியில் சுற்றக் கூடாது என்று எச்சரித்து அட்டை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறினர்.
இந்த சம்பவம் குறித்து அன்வர்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி சாய்ஃபுதின் பெக் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்:-
நாங்கள் ஆடு ஊரடங்கு விதிமுறையை மீறி மாஸ்க் அணியாமல் சுற்றியதற்காக கைது செய்யவில்லை. மாஸ்க் அணியாத நபர் ஒருவர் ஆட்டை தூக்கிக் கொண்டு சென்றார் அப்பொழுது போலீசாரை பார்த்துவிட்டு ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து நாங்கள் ஆட்டை காவல் நிலையத்திற்கு தூக்கிவந்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே காவலர்கள் ஆட்டை ஜீப்பில் ஏற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பிலிருந்தும் காவலர்களின் செயல்களை விமர்சித்து வருகிறார்கள்.