விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.
இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து விராட் கோலிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட்கோலி உலகக்கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து ரோஹித் ஷர்மா தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வந்தார். நியூசிலாந்து அணியை ரோஹித் ஷர்மா தலைமையிலான 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதனால் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம் செய்யப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
![Virat Kohli Might Miss 3 Tests, Rohit Sharma Unlikely To Travel With Team India For Australia Tour - Reports](https://cricfit.com/wp-content/uploads/2020/11/kohlu-2.jpg)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலியும், துணை கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜிங்கியா ரஹானே த்டெஸ் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.