விளையாட்டு

வீரர்களுக்கு கொரோனா தொற்று; இன்றைய (MI vs SRH) போட்டி ரத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில்  நாளுக்கு  நாள் அதிகரித்து  வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல். டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய  ஐபிஎல்  கிரிக்கெட் தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வீரர்களுக்கு முறையாக பயோ-பபுளை முறையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் , கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்திப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த (கொல்கத்தா-பெங்களூரு) போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. 

ALSO READ  முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வெல்லுமா தென்னாப்பிரிக்கா ?

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மும்பை இந்தியன்ஸ்-ஹைதராபாத் அணிகளுக்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணி வீரர் விர்திமான ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய போட்டியை ஐ.பி.எல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் கூறியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 நாடுகளில் ‘சூப்பர் சீரிஸ்’ ஒருநாள் தொடர்- கங்குலியின் அடுத்த பிளான்

Admin

நெத்தியை தாக்கிய பந்து; ரத்த வெள்ளத்தில் விழுந்த வீரர் – அறிமுக போட்டியிலேயே நேர்ந்த சோகம்!

naveen santhakumar

ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :

Shobika