சென்னை:-
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200622-WA0049-1024x567.jpg)
தமிழகத்தில் மேலும் மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கத்தினர் தற்காப்பு நடவடிக்கையாக காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களை 10 நாட்கள் மூட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200622-WA0050.jpg)
அதேபோல், மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்க அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200622-WA0052.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும், நேற்று ஞாயிற்றுகிழமை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் வரும் 28ஆம் தேதியும் எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, தற்போது, மதுரையிலும் நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.