தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது” என உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

ALSO READ  தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பு : பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை...!!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor

நம்மை காக்க அரும்பாடு படும் ராணுவ வீரர்களுக்கு நாம் தாராளமாக நிதியளிக்கலாம்-முதல்வர்:

naveen santhakumar

மோசடி- தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

naveen santhakumar