தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 56 சதவீதத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது மெகா தடுப்பூசி முகாமை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
மேலும் மத்திய அரசு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 1000 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி அலகு மற்றும் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 667 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி அலகு ஆகியவற்றையும் தொடங்கிவைத்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.