தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தற்போது கேரளாவில் பரவிவரும் நிபா வைரசால் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
![தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு | Tamilnadu government extends Corona curfew till March 31 - Tamil Oneindia](https://tamil.oneindia.com/img/2021/02/lockdown-tn-1614525628.jpg)
தமிழகத்தில் இரண்டாம் அலை குறைந்துள்ள சூழலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணிகளை வகுத்து வரும் நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடங்கிவிட்டது.
இதனிடையே தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் புதிய C.1.2 வைரஸ் படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.
இதனிடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளான். இதனால் தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே கொரோனா, நிபா வைரஸ் பரவுதலை தடுக்கு தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.