பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ருபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடந்து வரும் நிலையில் திமுக தரப்பிலிருந்து பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “ரூபாய் 2.500, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர வேண்டும். ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது. பரிசுத்தொகை டோக்கனில் அ.தி.மு.க. தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது தவறானது. எனவே பொங்கல் பரிசுத்தொகை டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்க அனுமதிக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.