தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மத்திய அரசு 2021 ஏப்ரல் 1 முதல் தயாரிக்கக்கூடிய கார்கள் அனைத்திலும் இரண்டு ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என வரைவறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடந்துவரும் நிலையில் மத்திய அரசு அடுத்தாண்டு ஏப்ரல் முதல் கார்களில் ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி முன்பக்கதிலுள்ள மற்றொரு சீட்டிலும் ஏர் பேக்கை கட்டாயமாக்க திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்திய தரச்சான்று தரத்தில் ஏர்பேக் அமைப்பது காட்டாயம்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/12/download-7.jpg)
அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் உள்ள சீட்டுக்கும் ஏர் பேக் கட்டாயம் அமைக்க வேண்டும். இது தொடர்பான வரைவு அறிக்கை மீது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பினை பெற்றுவருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.