உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் அங்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது.


Share
ALSO READ  அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்…...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த அதிசயபெண்… 

naveen santhakumar

அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கத்தை தொடர்ந்து….. சுனாமி எச்சரிக்கை:

naveen santhakumar

பெண் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்……அதிர்ந்த வீராங்கனை….

naveen santhakumar