இஸ்லாமாபாத்:-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக அவருடைய மகன் காசிம் கிலானி ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்:-
இம்ரான்கான் அரசாங்கத்திற்கு நன்றி, எனது தந்தையின் உயிரை வெற்றிகரமாக ஆபத்தில் தள்ளிவிட்டீர்கள் என்று இம்ரான் கானையும், அவரது அரசையும் குற்றம் சாடியுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். கொரோனா அதிகரிக்கும் இந்த சூழலில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு தேவை என அவரது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200614-WA0018.jpg)
ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதம் காரணமாகவே இம்ரான் கான் அரசை காசிம் குற்றம்சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது தந்தைக்காக பிரார்த்திக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக இன்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா இருப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200613-WA0047-1.jpg)