பெர்லின்:-
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் உலகின் வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்ற அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் முன்பு எந்த நாடும் வல்லரசு இல்லை என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
உலகின் சர்வ வல்லமை படைத்த நாடு என்று கூறப்பட்டு வந்த அமெரிக்கா தற்போது தலைகீழாய் கவிழ்ந்துள்ளது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளும் சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உடைகளுக்கு (PPE) கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
உலகில் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் குப்பைகளை போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை (Garrbage Bags) கொண்டு தங்கள் உடல்களை மூடி மறைத்து மருத்துவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை காரணமாக ஜெர்மனி மருத்துவர்கள் நிர்வாண போராட்டத்தை தொடங்கியுள்ளனர் இந்தப் போராட்டத்திற்கு
Blanke Bedenken அல்லது Naked Qualms என்று பெயரிட்டுள்ளனர். நீ எங்க வேணாம் போ ராட்டம் கொடுத்த லிங்க் ://www.blankebedenken.org/ .
இது குறித்து போதிய மருத்துவர்கள் நாங்கள் நீண்ட காலமாக பாதுகாப்பு உபகரணங்கள் கூறி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் இதுநாள் வரையில் அரசு எங்களது குரலுக்கு செவிசாய்க்கவில்லை இதைத் தொடர்ந்து தான் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது மருத்துவர்கள் ஆடைகள் எதுவும் இன்றியே தங்களது பணிகளை தொடர்ந்து வருகிறார்கள் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போராட்டம் தொடர்பாக கிறிஸ்டியன் ரெச்டென்வால்ட் (Christian Rechtenwald) என்ற ஜெர்மானிய பொது மருத்துவர் கூறுகையில்:-
நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்படாத காரணத்தால் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம் முன்னதாக இதே போன்று பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மருத்துவர்கள் நிர்வாணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கட்டாயப் படுத்தப் பட்டார்கள் இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அனைவரும் நிர்வாண போராட்டத்தை தொடங்கினார்கள்.
அதன் தொடர்ச்சியாக தற்போது நாங்களும் இதுபோன்று நிர்வாண போராட்டத்தை தொடர்ந்து உள்ளோம் நோயாளிகளுக்கும் எங்களுக்கும் கௌரவம் மற்றும் கண்ணியம் முக்கியம். இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் மருத்துவர்களை பணியாற்ற சொல்வது நோயாளிகளுக்கும் எங்களுக்கும் எங்களால் மற்றவர்களுக்கும் தீங்காக அமையும் என்றார்.
முன்னதாக பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நிர்வாணமாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார் இதைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் பெருமளவில் நிர்வாண போராட்டங்களில் ஈடுபட்டார்கள் ஆனாலும் இதுவரையில் அரசு அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எந்த தகவலும் இல்லை.