உலகம்

ஜப்பான் மற்றும் தென் கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தடை-காரணம் என்ன..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் என உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 13 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது.

அதே போல ஜப்பானிலும் அதிகளவில் கொரோனா பரவியுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கூறிய இந்திய தூதரகம்:-

ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதையடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வர விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளது.

ALSO READ  அமெரிக்க மாணவி ரஷ்யாவில் மர்ம மரணம்…!

இதே போல் ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அங்கு பயணம் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தோனேஷியாவில் ரத்த வெள்ளம்….மக்கள் அதிர்ச்சி…!!!!!

naveen santhakumar

விமான நிலையத்தில் நாடகமாடிய கர்ப்பிணிப் பெண் எதற்கு தெரியுமா?

Admin

உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்….

naveen santhakumar