இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது இரு தரப்பில் ரூ.10 ஆயிரத்து 200 கோடி வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளவிருந்த இந்திய சுற்றுப்பயணம் இருமுறை ரத்தானது.
கடைசியாக கடந்த மாதம் 25-ந்தேதி அவர் வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டபோது, அவரும், இந்திய பிரதமர் மோடியும் காணொலி காட்சி வழியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகின.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஏற்கெனவே வலுவான வர்த்தக உறவு உள்ளது. தற்போது இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அந்த உறவு வலுப்பெற்றுள்ளது. இந்தியாவின் பசுமைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டன் முன்னுரிமை அளிக்கிறது என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு நிதிச் சந்தைகளைப் பலப்படுத்துவதற்காக இணைந்து செயல்படுவது குறித்து எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின்போது ஆலோசிக்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். சி.திவ்யதர்ஷினி