துபாய்:-
கொரோனா பரவலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பணி புரிந்துவரும் இந்தியர் ஒருவருக்கு 10 மில்லியன் திர்ஹாம் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200504-WA0110.jpg)
இந்தியாவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார் எள்ளிக்கோட்டில் பரமேஸ்வரன் (Dileep Kumar Ellikkottil Parameswaran). ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் (Ajman)-ல் உள்ள வாகன உதிரிபாக தொழிற்சாலையில் (Auto Spare Parts Company) வேலை செய்து வருகிறார். இவரது மாத வருமானம் 5000 திர்ஹாம் (1361 USD).
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200504-WA0108.jpg)
இதுகுறித்து கூறிய திலீப்குமார் பரமேஸ்வரன்:-
நான் எனது குடும்பத்தினருடன் கிட்டத்தட்ட பதினேழு வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரிந்து வருகிறேன். கிட்டத்தட்ட எனக்கு 7,00,000 திர்ஹாம் கடன் உள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டத்தின் மூலமாக அந்த கடனை நான் அடைத்துவிடுவேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே மீதப் பணத்தை அவர்களின் கல்விக்காக செலவிட போகிறேன் என்றார்.
Big Ticket Draw Raffle என்பது அபுதாபியில் நீண்ட காலமாக நடைபெறும் மிகப்பெரிய ரொக்கப்பரிசு மற்றும் சொகுசு கார்களுக்குகான மாதாந்திர குழுக்கள் ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வாங்கலாம்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200504-WA0111.jpg)
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி குலுக்கல் நடைபெறும். இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை 500 திர்ஹாம் ஆகும்.