லண்டன்:-
இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் வசித்துவந்த 7500 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. இந்நிலையில் கேர் இங்கிலாந்து என்ற அமைப்பு (இங்கிலாந்தில் அதிகளவு முதியோர் இல்லங்களை நடத்தும் அமைப்பு) வெளியிட்டுள்ள தகவலின்படி 250க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்களில் அதிக உயிரிழப்புகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் உயிரிழப்பு அதிகம் நிகழ்ந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
இதுவரை இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 14,500 பேர் வரை இறந்துள்ளனர். ஆனால் இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.