ஜெனிவா:-
மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றில் இருந்து தப்ப முடியாது WHO கூறியுள்ளது.
உலகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், மாஸ்க் அணிவதுமே அதனை கட்டுப்படுத்த முக்கிய வழிகளாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக பல நாடுகள் மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளன.
இதனிடையே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளில்:-
மக்களின் பாதுகாப்பில் தவறான தகவல்களை வழங்கக் கூடாது எனவும், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுவது மட்டுமே இதற்கான முக்கிய தீர்வாகும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் உபாதைகள் உள்ளவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் மாஸ்க் அணியலாம் என்று கூறியுள்ளது.
பொதுவெளியில் மக்கள் துணியால் ஆன 3 லேயர் மாஸ்கையே பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.