சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 59, 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 257 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 32,987 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது.
#Corona #coronaspread #CoronaPostiveCases #TamilThisai #Coronafightindia #covid19 #coronaupdate #centralgovt #india