தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடித்த வருகிறார்.
அதில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிதித்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவிர், ஆக்சிஜன், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடித்து வருவதாக கூறப்படுகிறது மேலும் இந்த கூட்டம் முடிந்த பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.