லக்கோ:-
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவரது இறுதிசடங்குகள் நாளை உத்தரகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் (Pauri) உள்ள அவர்களது சொந்த கிராமத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் கொரோனா நோய் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் யோகி ஆதித்யநாத்-ன் தந்தை மறைவிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.