இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
அதனையடுத்து நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கி வருகிறது படக்குழு.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார், சூரி நடிக்கும் படம், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் இவ்விரண்டையும் முடித்தபின்னர் விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Vetrimaran #Dhanush #Asuran #Vjay #Soori #Vijaysethupathi #VijayVetrimaran #TamilThisai #Tamilcinema #Tamilmovie #Cinema #CineUpdate #Kollywood #cinemas #Vijay #Thalapathy #Vadachennai