இந்தியா தமிழகம்

தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை போலீசார் தேடி வந்த மும்பையை சோ்ந்த பிரபல தொழிலதிபர் நிக்மத் அலியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பையை சோ்ந்த பிரபல தொழில் அதிபர் நிக்மத் அலி மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு பதிவாகியுள்ளதையடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்து, நிக்மத் அலியை தேடி வந்தனா். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மும்பை மாநகர போலீஸ் கமிஷ்னர்,தொழில் அதிபா் நிக்மத் அலியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நிலையில், இன்று காலை சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த நக்மத் அலியின் பாஸ்போர்ட் ஆவணங்களை சோதனை செய்யும் பொழுது அவர் மும்பை போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை வெளியே விடாமல் தனி அறையில் வைத்ததோடு மட்டுமல்லாமல் மும்பை மாநகர போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  TNPSC மோசடி…..மேலும் 20 பேர் கைது….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

suzuki வாகனங்களின் விலை அதிகரிப்பு

Admin

லட்சத்தீவை கைப்பற்றும் பாஜக..!

News Editor

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்…!

naveen santhakumar