டெல்லி:
இந்தியாவில் நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது.
கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் 387 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாக என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை கூறுகின்றது.
முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், 2வது அலையில் இதுவரை இறப்பு சதவிகிதம் 5.7 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இரண்டு அலைகளிலும் இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கிறது.
இதன் மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புகளும் இறப்பும் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது .