தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து இதற்கு ‘யாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஷ் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் கூறியிருந்த நிலையில், தற்ப்போது அதி தீவிர புயலான யாஷ் கரையை கடக்க தொடங்கியுள்ளது.
இந்த புயல் கரையை கடந்து வருவதால் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. புயல் சேதத்தை கட்டுப்படுத்த ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் செய்யப்பட்டிருக்கிறது. புயல் கடக்கும் ஒடிசா- மேற்கு வங்கம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.