தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 86 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 147 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
முழு வீச்சில் வாக்கு எண்ணும் பணி நடந்து வரும் நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியிட்ட சி.பி.ஐ கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.