அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அஹமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதி குடிசைவாசிகளை, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0130.jpg)
வரும் 24-ம் தேதி வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அஹமதாபாத் வருகிறார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0131.jpg)
டிரம்ப் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0133.jpg)
பின்னர், அங்கிருந்து மோடேரா (Motera) பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு, ‘ஹௌடி டிரம்ப்’ (Kem cho Trump) என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0129.jpg)
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0128.jpg)
இந்நிலையில், டிரம்ப்-ன் அஹமதாபாத் வருகையையொட்டி, மோடேரா(Motera) பகுதி குடிசைவாசிகளை வரும் 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200218-WA0132.jpg)