தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை. அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம்” என தெரிவித்தார்.
இந்நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி,
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.