தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 80 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 153 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
முழு வீச்சில் வாக்கு எண்ணும் பணி நடந்து வரும் நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட `பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.