அரசியல்

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 80 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 153 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

முழு வீச்சில் வாக்கு எண்ணும் பணி  நடந்து வரும் நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட `பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.


Share
ALSO READ  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது: ஆம் ஆத்மி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை (GST) வரிதான்- சுப்ரமணியன் சுவாமி…

naveen santhakumar

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு! 

News Editor

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

Admin