தமிழக அரசு கொரோனா பரவல் அதிகமானதால் தமிழ்நாடு முழுவதும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் 10 வரை மட்டும் அனுமதி அளித்துள்ளது அதன் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலை முதலே மக்கள் பலர் காய்கறிகளை வாங்கி சென்றனர். 10 மணி ஆகியதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அடைக்க அறிவுறுத்தினர் மற்றும் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்..
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட்டதால் காய்கறிகள் பழங்கள் வியாபாரம் ஆகாத நிலையில் அதனை மார்க்கெட் பகுதிகளிலேயே கொட்டிவிட்டு சென்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது ” வியாபார நேரம் குறைப்பால் நாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை இதன் காரணமாக காய்கறிகள் அழுகும் நிலை ஏற்படுகிறது.
ஆகையால் அதனை நாங்கள் கொட்டும் சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அரசாங்கம் கால அளவை நீட்டித்து தந்தால் அரசு வீதி முறைகளுடன் மார்க்கெட் செயல்படும் எனவே அரசு இதில் கவனம் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.