கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து இந்த ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா வருகிறது.
இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்திருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.