கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள், வரும் 7- ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழக எல்லைப்புற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் அங்கு மது பிரியர்கள் செல்வதை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. எனவே இவர்களின் சிரமத்தை போக்க வேண்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரம், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் நிச்சயம் திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும். ஆனால், மதுபான கடைகளில் பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
மக்கள் கூட்டமா சேருவதை தவிர்க்கும் பொருட்டு, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தவிர, 6 அடி தூரம் வரை ஒருவருக் கொருவர் தள்ளி நின்று, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.