கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதனையடுத்து இன்று காலை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி
வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தொடங்கி வைத்தார். நேரடியாக கூட்டுறவு துறையின் சார்பில் கொள்முதல் செய்து காய்கறி வழங்குவதால் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறது.மேலும் நகர் முழுவதும் 1610 காய்கறி வாகனங்கள் வியாபாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை தரப்பில் காய்கறிகளை விநியோகம் செய்யபடுகிறது. வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உட்பட 11 காய்கறிகள் சேர்ந்த தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறி வண்டிகள் மண்டல வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.