உலகம்

ஒடிசா ரெயில் விபத்து – ஜப்பான் பிரதமர் இரங்கல்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிர் இழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்;  வட இந்தியாவில் வீடுகள் அதிர்வு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியுடன் மோதல்

News Editor

ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் -சீனாவில் அதிசயம்

Admin

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புது காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கும்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை… 

naveen santhakumar