சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு (85) கொரோனா தொட்டு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் கொடுப்பதுடன் தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில், ஃபாரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் உமர் அப்துல்லா, “மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர்கள் தந்தையை இன்னும் சிறப்பாக கவனிப்பதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.
#FarooqAbdullah #kashmir #TamilThisai #CoronaVirus #covid #CoronaPositivecases #kashmirExChiefMinister #coviddeath